Case No.SA 9922/2022 மனுவில் கோரியுள்ள ஆவணங்கள் பொது அதிகார அமைப்பு மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலகங்களின் பராமரிப்பில் இல்லாத பட்சத்தில்,ஆணை உறுதி பிரமாண பத்திரம் மூலம் உறுதி செய்யவும்

மனுதாரர் 100 பக்கங்களுக்கு மிகாமல் எழுதிக் கோரினால், அத்தகவல்களை கட்டணம் ஏதுமின்றி (100 பக்கத்திற்கு மேல் எனில், பக்கத்திற்கு ரூ.2/- வீதம் மனுதாரர் செலுத்தும் பொருட்டு), அலுவலக முத்திரையுடன் கூடிய சான்றொப்பமிட்டு, மனுதாரருக்கு நேரில் அல்லது ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவஞ்சலில் வழங்கி, அதனை மனுதாரர் பெற்று ஏற்பளிப்பு செய்ததற்கான ஒப்புகை அட்டையின் நகலினை இவ்வாணையத்திற்கு அனுப்பி வைக்க இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை வட்டாட்சியர் அலுவலகம், வட்டசார் ஆய்வாளர் / பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்படுகிறது.
மேலும், மனுதாரர் மனுவில் கோரியுள்ள ஆவணங்கள் தங்கள் பொது அதிகார அமைப்பு மற்றும் மேற்குறிப்பிட்டுள்ள சம்பந்தப்பட்ட அலுவலகங்களின் சம்பந்தப்பட்ட பராமரிப்பில் இல்லாத பட்சத்தில், அது சம்பந்தமாக பொதுத் தகவல் அலுவலர், வட்டசார் ஆய்வாளர், நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை வட்டாட்சியர் அலுவலகம், பரமக்குடி, இராமநாதபுரம் மாவட்டம் அவர்கள் அலுவலக முத்திரையுடன் கூடிய சான்றொப்பத்துடன், ரூ.20/- மதிப்பிலான ஆணை உறுதி பிரமாண பத்திரம் (Swom Affidavit) (ஆவணம் பராமரிப்பில் இல்லை என்பதை) மூலம் உறுதி செய்யவும், பொதுத் தகவல் அலுவலர், மேற்படி ஆணை உறுதி பிரமாண பத்திரத்தினை மனுதாரருக்கு ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவஞ்சலில் அல்லது நேரில் தகவலாக வழங்கவும் உத்தரவிடப்படுகிறது. இதன் வாயிலாக, மனுதாரரால் கோரப்படும் தகவல் (மனுதாரருக்கு பாத்தியப்பட்ட) குறித்து நீதிமன்றம், வருவாய் துறை அணுகி தனது வாதுரைகளை எடுத்துரைக்க ஏதுவாக அமையக்கூடும். மேற்குறிப்பிட்டவாறான தகவல்கள் மூன்றாம் நபர் தகவல்களாக இருக்கும் பட்சத்தில், மூன்றாம் நபர் ஆட்சேபனை கடிதத்தினை மனுதாரருக்கு தகவலாக வழங்கவும் உத்தரவிடப்படுகிறது.
மேற்படி, இவ்வாணையத்தின் ஆணைக்கிணங்க பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு தகவல் வழங்க தவறும் பட்சத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 20(1) மற்றும் 19(8)(b)-ன்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.

 

Download

Case No.SA 9922/2022 மனுவில் கோரியுள்ள ஆவணங்கள் பொது அதிகார அமைப்பு மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலகங்களின் பராமரிப்பில் இல்லாத பட்சத்தில்,ஆணை உறுதி பிரமாண பத்திரம் மூலம் உறுதி செய்யவும்

க. குமரேசன்

சட்ட ஆர்வலர்