Case No.30715/09 1864ஆம் வருட ஆவணங்களின் நகல் கேட்டு மனு

இன்றைய விசாரணைக்கு வந்திருந்த மனுதாரருடைய பிரதிநிதி தன்னுடைய மனுவில் கோரிய 3 நகல்கள் கிடைக்கவில்லையென்று மீண்டும் தெரிவித்தார். பொதுத் தகவல் அலுவலர், மனுதாரர் கோரிய நகல்கள் தமிழ்நாடு ஆவண காப்பகத்திலிருந்து கிடைக்கப் பெறாததால் மனுதாரருக்கு வழங்க இயலாத நிலை உள்ளது என்று தெரிவித்தார். விசாரணையின் முடிவில் இவ்வாணையம் கீழ்க்கண்ட ஆணையை, பிறப்பிக்கிறது :-
1. மனுதாரர் கோரிய 3 நகல்களும் ஒரு மாதத்திற்குள் மனுதாரருக்கு வழங்கப்பட பொதுத் தகவல் அலுவலர் பணிக்கப்படுகிறார்.
2. மனுதாரர் கோரிய 3 நகல்களும் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படவில்லை எனில், பொதுத் தகவல் அலுவலர், மனுதாரர் கோரிய 3 நகல்களும் தமிழ்நாடு ஆவண காப்பகத்திற்கு கடிதம் அனுப்பியும் பெறப்படவில்லை அதனால் வழங்க இயலவில்லை என்பதை ரூ.20/- மதிப்புள்ள முத்திரைத் தாளில் (Non Judicial Stamp Paper) வாக்குப் பிரமாணம் ஒன்றை இவ்வாணையத்திற்கு இவ்வாணை கிடைத்த ஆறு வாரங்களுக்குள் அனுப்பி, அதன் நகலை மனுதாரருக்கு வழங்கி, வழங்கிய தகவலின் விபரத்தை இவ்வாணையத்திற்கு சமர்ப்பிக்குமாறு இவ்வாணையம் உத்தரவிடுகிறது.

Download

Case No.30715/09 1864ஆம் வருட ஆவணங்களின் நகல் கேட்டு மனு

க. குமரேசன்

சட்ட ஆர்வலர்