Case No 3862/2009 1967-ம் ஆண்டில் பராமரிக்கப்பட்ட ஆவணங்களிலிருந்து மனுதாரருக்கு வேண்டிய ஆவணங்களை வழங்க உத்தரவு

1) மனுதாரரின் மனுவில் குறிப்பிட்டுள்ள இனம் 2-க்கு 1967-ம் ஆண்டில் பராமரிக்கப்பட்ட ஆவணங்களிலிருந்து மனுதாரருக்கு சம்பந்தப்பட்ட அலுவலகத்திலிருந்து உரிய தகவலை பெற்று வழங்குமாறும், இனம் 3- க்கு உரிய ஆவணங்கள் அவ்வலுவலகத்தில் இருந்தோ அல்லது அதற்கு முன்பு பராமரிக்கப்பட்ட செங்கல்பட்டு அலுவலகத்தில் இருந்தோ தகவலை பெற்று மனுதாரருக்கு இவ்வாணை கிடைக்கப்பெற்ற 15 தினங்களுக்குள் இலவசமாக வழங்கி அதன் விவரத்தை இவ்வாணையத்திற்குத் தெரிவிக்குமாறு பொதுத் தகவல் அலுவலருக்கு ஆணையிடப்படுகிறது.
2) மனுதாரருக்கு சுமார் 9 மாதங்களாக தகவல் உரிமைச் சட்டப்படி மனு செய்திருந்தும் தகவல் வழங்காததற்கு தகவல் உரிமைச் சட்டப் பிரிவு 20(1)-ன் கீழ் பொதுத் தகவல் அலுவலர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கான விளக்கத்தைப் பெற்று ஒரு மாதத்திற்குள் இவ்வாாணயத்திற்கு அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர், காஞ்சிபுரம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

 

Download

Case No 3862/2009 1967-ம் ஆண்டில் பராமரிக்கப்பட்ட ஆவணங்களிலிருந்து மனுதாரருக்கு வேண்டிய ஆவணங்களை வழங்க உத்தரவு

க. குமரேசன்

சட்ட ஆர்வலர்