Case No:SA.14189/2022 பட்டாவினை ரத்து செய்யக் கோரிய மனுதாரரின் மனுக்களின் மீது விசாரணையை துரிதப்படுத்த உத்தரவு
அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பான விசாரணை அறிக்கையினை மனுதாரருக்கு தகவல்களாக வழங்கும் பொருட்டு பொதுத் தகவல் அலுவலர்கள் / வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் தேவக்கோட்டை மற்றும் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சிவகங்கை மாவட்டம் ஆகியோர் மனுதாரருக்கு கடிதம் வாயிலாக தொடர்பாக ஆவணங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, சட்டப்பிரிவு 2(j)-ன்படி அலுவலக நேரத்தில் பார்வையிட்டு குறிப்பெடுத்துக் கொள்ள தெரிவித்து, மேற்படி விசாரணை நகலினை கட்டணம் ஏதுமின்றி அலுவலக முத்திரையுடன் கூடிய சான்றொப்பமிட்டு மனுதாரருக்கு நேரில் அல்லது ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவஞ்சலில் வழங்கி அதனை அவர் பெற்று ஏற்பளிப்பு செய்ததற்கான ஒப்புகை அட்டையின் நகலினை இவ்வாணையத்திற்கு அனுப்பி வைக்க பொதுத் தசுவல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்படுகிறது.
மேற்படி இவ்வாணையத்தின் ஆணைக்கிணங்க பொதுத் தகவல் அலுவலர்கள், மனுதாரருக்கு தகவல்கள் வழங்க தவறும் பட்சத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, சட்டப்பிரிவு 20(1) மற்றும் 19(8)(b)-ன்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.
Download
Case No:SA.14189/2022 பட்டாவினை ரத்து செய்யக் கோரிய மனுதாரரின் மனுக்களின் மீது விசாரணையை துரிதப்படுத்த உத்தரவு

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
