Case No.SA 18867/2022 மெய்த்தன்மை சான்று வழங்கப்படாததற்கான அலுவலக காரணங்களை 8 இனங்களில் தகவல்களாக வழங்கக் கோரி மனு
இவ்வழக்கு குறித்த இன்றைய விசாரணையில், பொதுத் தகவல் அலுவலர், மனுதாரர் சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் கோரிய தகவல்கள் மனுதாரருக்கு வழங்கப்பட்டுள்ளதாக எடுத்துரைத்தார். மனுதாரர், தான் கோரிய தகவல்களுக்கு உரிய தகவல்கள் தனக்கு நாளதுவரை வழங்கப்படவில்லை என எடுத்துரைத்தார்.
மனுதாரர் மற்றும் பொதுத் தகவல் அலுவலர் வாதம் மற்றும் ஆவணங்களை ஆணையம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டதில், மனுதாரர் சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் கோரியுள்ள, விக்கிரவாண்டி வட்டம், கல்யாணம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த திரு.வை.குப்புசாமி,த/பெ.வைத்திலிங்கம் என்பவர் மெய்த்தன்மை வேண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட கடிதத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த 8 இனங்களுக்கான தகவல்களை மனுதாரருக்கு வழங்கும் பொருட்டு, பொதுத் தகவல் அலுவலர், இவ்வாணை கிடைக்கப்பெற்ற 30 தினங்களுக்குள், மனுதாரருக்கு கடிதம் வாயிலாக தொடர்பான ஆவணங்களை தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005, பிரிவு 2(j) ன்படி அலுவலக நேரத்தில் பார்வையிட்டு குறிப்பெடுத்துக்கொள்ள தெரிவித்து, அவருக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஆவணங்களின் நகலை அவர் 100 பக்கங்களுக்கு மிகாமல் எழுதிக் கோரினால், மனுதாரருக்கு தகவல்களை கட்டணம் ஏதுமின்றி (100 பக்கத்திற்கு மேல் எனில், பக்கத்திற்கு ரூ.2/- வீதம் மனுதாரர் செலுத்தும் பொருட்டு), அலுவலக முத்திரையுடன் கூடிய சான்றொப்பமிட்டு, மனுதாரருக்கு நேரில் அல்லது ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவஞ்சலில் வழங்கி, அதனை அவர் பெற்று ஏற்பளிப்பு செய்ததற்கான ஒப்புகை அட்டையின் நகலினை இவ்வாணையத்திற்கு அனுப்பி வைக்க பொதுத் தகவல் அலுவலருக்கு
உத்தரவிடப்படுகிறது.
மேலும், மேற்படி ஆணைக்கிணங்க பொதுத் தகவல் அலுவலர் தகவல் வழங்க தவறும் பட்சத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 20(1) மற்றும் 19(8)(b)-ன்கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.
Download
Case No.SA 18867/2022 மெய்த்தன்மை சான்று வழங்கப்படாததற்கான அலுவலக காரணங்களை 8 இனங்களில் தகவல்களாக வழங்கக் கோரி மனு

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
