Case No.SA 9997/2022 பட்டா மாறுதல் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரம்
இன்றைய விசாரணையில் பங்கேற்ற பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு தகவல்கள் வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
இன்றைய விசாரணையின் முடிவில், மேற்படி, மனுதாரரின் 05.03.2022 தேதியிட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1) மனுவில் கோரியுள்ள இராமநாதபுரம் மாவட்டம் (ம) வட்டம், புதுமடம் வருவாய் கிராமத்தின் சர்வே எண்.256/15 பட்டா எண்.412-ன் நத்தம் பட்டா மாறுதல் குறித்து கடந்த 01.10.2021 அன்று ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்த விண்ணப்பம் (விண்ணப்ப எண்.2021/9005/27/216063/1001) மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரம் தொடர்பான தகவல்களை மனுதாரருக்கு முழுமையாக வழங்கும் பொருட்டு, பொதுத் தகவல் அலுவலர், இவ்வாணை கிடைக்கப்பெற்ற 15 தினங்களுக்குள், மனுதாரருக்கு கடிதம் வாயிலாக, தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து, தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 2(j)ன்படி அலுவலக நேரத்தில் பார்வையிட்டு குறிப்பெடுத்துக்கொள்ள தெரிவித்து, அவருக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஆவணங்களின் நகல்களில் அலுவலக முத்திரையுடன் கூடிய சான்றொப்பமிட்டு, மனுதாரருக்கு நேரில் அல்லது பதிவஞ்சலில் வழங்கி, அதனை அவர் பெற்று ஏற்பளிப்பு செய்ததற்கான ஒப்புகை அட்டையின் நகலினை இவ்வாணையத்திற்கு அனுப்பி வைக்க இராமநாதபுரம் மாவட்டம், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் / பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்படுகிறது.
மேற்படி, இவ்வாணையத்தின் ஆணைக்கிணங்க பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு தகவல் வழங்க தவறும் பட்சத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 20(1) மற்றும் 19(8)(b)-ன்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.
Download
Case No.SA 9997/2022 பட்டா மாறுதல் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரம்

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
